Tuesday 12 May 2015

ஆசிய தடகளம் இந்திய வீரர் புதிய உலக சாதனை . . .

தோஹாவில் நடந்த இளையோருக்கான ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் பிண்ட் சிங் 800 மீட்டர் ஓட்டத்தில் மிக விரைவாக ஓடி புதிய உலக சாதனை படைத்தார்.இளையோருக் கான முதலாவது ஆசிய தடகள விளையாட்டு போட்டிகள் தோஹாவில் உள்ள கத்தார் விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றன. இந்த போட்டியில் 16 வயதான இந்திய தடகள வீரர் பீண்ட் சிங் 800 மீட்டர் பிரிவில் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 52. 26 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இளையோருக்கான பிரிவில் உலக அளவில் பீண்ட் சிங் மிக வேகமாக ஓடி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.மேலும், ஒரு வெள்ளி இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் பிண்ட் சிங் வென்றார். அதேபோல், மற்றொரு வீரரான மகாராஷ்ட்டிராவை சேர்ந்த கிஸான் தாத்வி 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். பந்தய தூரத்தை 8 நிமிடம் 26.24 வினாடிகளில் கடந்தார். ஆர்.ராஜேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்....நமது BSNLEU-வின் வாழத்துக்கள் ...

No comments: