Thursday 9 April 2015

மதுரையில் ஆவின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் . . .

ஆவினில் பணிபுரியும் முதுநிலை ஊழியர்களுக்கு தர ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த முறையை ரத்துசெய்ய வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம்புதிய நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை ஆவின் ஊழியர் சங்கம் (சிஐடியுசார்பில் புதனன்று மாலைஆவின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பா.விக்ரமன், தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்க பொதுச் செயலாளர் இரா.லெனின், சங்கச் செயலாளர் எஸ்.வேல்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். சங்கப் பொருளாளர் .மணிவேல் உட்படஏராளமானோர் கலந்து கொண்டனர்.240 நாட்கள் ஈட்டிய விடுப்பு நிலுவையை அமலாக்க வேண்டும். கேண்டீனை நிர்வாகமே ஏற்றுநடத்த வேண்டும். ஆவின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

No comments: