Thursday 2 April 2015

தேனிரெவன்யு மாவட்ட தோழர்களுக்கு ரெட் சல்யூட்...

அருமைத் தோழர்களே ! மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தின் "SAVE BSNL" கையெழுத்து இயக்க கோட்டாவை எப்படியேனும்  முடித்தாக வேண்டும்  என்பதில் கண்ணும் கருத்துமாக நமது தேனிரெவன்யு மாவட்ட தோழர்களின்  முழுமையான முயற்சிக்கு  நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் உளப்பூர்வமாக  ரெட் சல்யூட்... செய்கிறது...
தேனி மாவட்டத்தில் முதன்முதலில் பெரியகுளத்தில் மக்கள் பிரதிநிதி மரியாதைக்குரிய தோழர்.எ. லாசர், சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் முதல் கையெழுத்தில் துவங்கி, அதன் பின், போடி , பாளையம், தேனி, ஆண்டிபட்டி, சின்னமனூர் இப்படி அனைத்து பகுதியிலும்  தொடர்ந்து தேனி ரெவன்யு மாவட்டம் முழுமைக்கும் தொடர் நடவடிக்கையாக முழுமையான  இயக்கமாக நடத்தி பொது மக்களிடம் கையெழுத்தை பெற்ற வண்ணம் உள்ள தோழர்கள் அனைவரையும் மதுரை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது...

 02.04.2015 அன்று சின்னமனூர் நகர் முழுவதும், பொதுமக்களிடம் தெருத் தெருவாக நமது தோழர்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்திய விதம் பாராட்டுக்கு உரியது. சின்னமனூரில் குறைந்த நேரத்திலேயே 1800-க்கும் மேற்பட்ட கையெழுத்தை பெற்றுள்ளனர்.

--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: