Saturday 4 April 2015

ஜெய் சிலிண்டர் காலி...!

.....ஆகவே பெரியோர்களே,3 நேர உணவை 2 நேரமாகவும், 2 நேரம் உண்பவர்கள் 1 நேரமாகவும் குறைத்துக் கொள்ள முன்வந்தால் சிலிண்டருக்கான மானியத்தை நீங்களே முன்வந்து துறந்துவிட்டதாக நாங்கள் அறிவித்துவிடுவோம்!ஒரு நேரம் மட்டுமே உண்பவர்கள் நாட்டின் நலன்கருதி உணவைத்துறக்க தயாராகுங்கள்.மானியம் என்ற அரக்கனை ஒழித்து, இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் இழுத்துச்செல்ல இதுதான் ஒரே வழி!நன்றி! வணக்கம்!அடுத்து பாரதப்பிரதமர் மாண்புமிகுமோடி அவர்களின் முழக்கம்... ஜெய் சிலிண்டர் காலி!-...---கே.பாலபாரதி எம்எல்ஏ (முகநூல் பக்கத்தில்)

No comments: