Tuesday 14 April 2015

முதலிடம் பிடித்து சானியா சாதனை . . .

டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்த முதல் இந் திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் சானியா மிர்சா.அமெரிக்காவின் கரோலினாவில் நடந்தபேமிலிசர்க்கிள் கோப்பைடென்னிஸ் தொடரின் இரட்டை யர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை,ஆஸ்திரேலியாவின் கசே டெல்லாகுவா, குரோஷி யாவின் டாரிஜா ஜூராக் ஜோடியை சந்தித்தது. 57 நிமிடமே நீடித்த இந்த போட்டியில் சானியா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் இந்த ஆண்டுதொடர்ச்சியாக மூன்றாவது பட்டத்தை வென்றுஹாட்ரிக்சாதனை படைத்துள்ளது.டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் இரட்டையர் பிரிவில் சானியா முதன் முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளார்.இதன்மூலம் டென்னிஸ் அரங்கில் முதலி டத்தை பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைத்தார் சானியா.மகத்தான சாதனை படைத்துள்ள சானியாவுக்கு நாடுமுழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, கிரிக்கெட் முன்னாள் வீரர் கவாஸ்கர், காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

No comments: