Wednesday 22 April 2015

திண்டுக்கல் & பழனியில் நடைபெற்ற போராட்டம்...

அருமைத் தோழர்களே ! இந்திய நாடு முழுமைக்கும் நமது BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் 21.04.15 முதல் நாள் போராட்டம் மிக சக்தியாக நடந்துள்ளது என்ற போராட்ட செய்தி மகிழ்சியாக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நமது மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும்  நன்றாக நடந்துள்ளது. அதே போன்று , இன்னும் கூடுதலாக 22.04.15 இரண்டாம் நாள் போராட்டத்தை சக்தியாக நடத்திட அனைவரும் முயற்சி  மேற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

 திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்ட ஆர்பாட்டத்தில், தோழர்.C . விஜய ரெங்கன், NFTE தலைமை வகுத்தார். தோழர். J.ஜோதிநாதன்,BSNLEU முன்னிலைவகுத்தார். தோழர்கள் .P . சந்திரகுமார்,SNEA, S.பரிமள ரெங்கராஜ், BSNLEU,அழகர்,ஓய்வூதியர் சங்கம்,A.வைத்திலிங்கபூபதி, BSNLEU, S. ஜான் போர்ஜியா, BSNLEU, சக்திவேல், TNTCWU ஆகியோர் போராட்டத்தைவிளக்கி  பேசினர். தோழர். M.சௌந்தர ராஜன், BSNLEU நன்றி கூறினார். 

பழனியில் நடைபெற்ற போராட்ட ஆர்பாட்டத்தில் கூட்டுத்தலமையாக தோழர்கள், மயில்வாகணன், SNEA, அன்பழகன், BSNLEU,துரைசாமி, SEWA, வீராசாமி, NFTE  ஆகியோர் இருந்தனர். தோழர்கள். P.கணேசன், BSNLEU, K.பழனிகுமார், BSNLEU, A. சிவபிரகாசம்  BSNLEU  கருப்பசாமி, TNTCWU ஆகியோர் போராட்டத்தை விளக்கி உரை நிகழ்த்தினர்.
--- போராட்ட வாழத்துக்களுடன், எஸ். சூரியன்.

No comments: