Saturday 18 April 2015

18.04.15 மதுரை லெவல் 4 வளாகம் நிரம்பியது...

அருமைத் தோழர்களே ! ஏப்ரல் 21 & 22 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்திற்கான விளக்க கூட்டம் 18.04.15 சனிக்கிழமை காலை  மதுரை லெவல் 4 வளாகத்தில் தோழர்கள் T.ஈஸ்வரன்,BSNLEU, S.கருப்பசாமி, SNEA ஆகியோரின் கூட்டுத்தலைமையில் மிக மிக சிறப்பாக நடைபெற்றது.
மதுரை லெவல் 4 வளாகத்தில் நடைபெற்ற போராட்ட சிறப்பு விளக்க கூட்டத்தில் அப்பகுதி அனைத்து அலுவலகத்தில் இருந்தும் தோழியர்களும், தோழர்களும் திரளாக கலந்கொண்டது என்பது  மிகவும் பாராட்டுக்குரியது ஆகும் . 
 கோரிக்கையை விளக்கி தோழர்கள், V.K.பரமசிவம், AIBSNLEA, S.சூரியன்,BSNLEU, S.சிவகுருநாதன், NFTE. S.நாகராஜன்,SNEA, P. அழகுபாண்டி ராஜா, SNATTA ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக தோழர் T.ஈஸ்வரன், BSNLEU நன்றி கூறினார்.
--- போராட்ட வாழ்த்துக்களுடன் , எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

No comments: