Thursday 16 April 2015

15.04.15 சிறப்பு மிகு மதுரை FORUM சிறப்பு கூட்டம் . . .

அருமைத் தோழர்களே !  15.04.15 புதன் கிழமை அன்று மதுரை பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில்  தோழர்.எஸ். சிவகுருநாதன், FORUM தலைவர்  தலைமயில்  மதுரை FORUM சார்பாக ஏப்ரல் 21 & 22 இரு நாட்கள் வேலை நிறுத்தத்தினை விளக்கி சிறப்பு கூட்டம் மிக மிக சிறப்பாக நடைபெற்றது  . . . வந்திருந்த அனைவரையும் வரவேற்று தோழர்.எஸ். சூரியன்,FORUM கன்வீனர்   உரை நிகழ்த்தினார்.
 அரங்கமே நிரம்பி வழிந்த  கூட்டத்தில், ஏப்ரல் 21 & 22 இரண்டு நாட்கள்   போராட்டத்தின் அவசியம், கோரிக்கை குறித்து தோழர்கள், V.P. இந்திரா,BSNLEU, M.லட்சம், NFTE, M.சந்திரசேகர்,SNEA, M.மோகன், AIBSNLEA, P.அழகுபண்டியராஜா, SNATTA,  M. பாலசுப்ர மணியன்,    AIBSNLOA ஆகியோர் விளக்கமான உரையை மிக மிக சிறப்பாக நிகழ்த்தினர். இறுதியாக D/S-SNEA தோழர் கே. தெய்வேந்திரன்  நன்றி கூற  கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments: