Monday 23 March 2015

மதுரை SSA முழுவதும் BSNLEUஅமைப்பு தின கொடியேற்றம்...

 அருமைத் தோழர்களே ! நமது மதுரை SSA முழுவதும், BSNLநிறுவனத்தின் பாதுகாவலனாய் விளங்கும், நமது  BSNLEU பேரியக்கத்தின் 15 வது அமைப்பு தின கொடியேற்றம் மிக விமர்சியாக தேனி - திண்டுக்கல் - மதுரை ஆகிய மூன்று  ரெவன்யு மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது.... 
மதுரை தல்லாகுளம் பகுதியில் ..... லெவல்-4 -ல் உள்ள நமது BSNLEU கொடியை தோழியர் பிரேமா ஏற்றிவைத்தார், CTMX-ல் உள்ள நமது BSNLEU கொடியை தோழர் எ. முபாரக் ஏற்றிவைத்தார். CSC/TKM-ல் உள்ள நமது BSNLEU கொடியை தோழர். சுப்பிரமணியன் ஏற்றிவைத்தார். மேற்கண்ட மூன்று இடங்களிலும் நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், சி. செல்வின் சத்தியராஜ், எஸ். மாயாண்டி, என். சோனைமுத்து  ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள நமது BSNLEU சங்க கொடியை தோழர்.கே. பாஸ்கரன் ஏற்றி வைத்தார். தோழர்.எஸ். சூரியன் நமது சங்க அமைப்பு தினமான , 2001 ஆம் ஆண்டு மார்ச் 21-22 தேதிகளில் விசாகபட்டினத்தில் நடைபெற்ற நேரடி நிகழ்வுகள் குறித்து நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
பழனியில் உள்ள பழைய தொலைபேசியகத்தில் உள்ள நமது  BSNLEU  சங்க கொடியை தோழியர் பத்மாவதி ஏற்றிவைத்தார். பழைய மைக்ரோவேவ் CSC-ல் உள்ள நமது BSNLEU  சங்க கொடியை தோழியர்.ஈஸ்வரி  ஏற்றிவைத்தார். பழனி  புதிய தொலைபேசியகத்தில்  உள்ள நமது BSNLEU  சங்க கொடியை தோழியர். ஜீவா ஏற்றிவைத்தார். தோழர்கள், கணேசன், பழனிகுமார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

No comments: