Thursday 8 January 2015

என்ன சிரமம் உங்களுக்கு...?

தூணிலும்துரும்பிலும்
இருப்பவன்வேறு மதத்திலிருந்தால்
என்ன சிரமம் உங்களுக்கு?
ஒன்று இடிக்கிறார்கள்
இல்லாவிட்டால்கட்ட நினைக்கிறார்கள்
இடித்தது மதச்சார்பின்மை.கட்ட நினைப்பது
ஜனநாயகத்திற்கு சமாதி.
உன் பெயரால்
இடிக்கும் போது
தடுக்க முடியாத
நீ என்ன கடவுள்?
இடித்து தள்ளிவிட்டீர்கள்
கட்டித்தான் ஆகவேண்டியிருக்கிறது
மக்கள் ஒற்றுமையை.
ஓணானைப் பிடித்து
சிலுவையில்அறைபவர்களிடம்
காரணம் கேட்டால் ராமருக்கு
சிறுநீர் கொடுத்ததாகக் கூறுகிறார்கள்
தண்ணீருக்குள்ளேபாலம் போட்டவர்
தண்ணீருக்கு ஒரு ஜீவனிடமா
கையேந்தியிருக்கப் போகிறார்?
மனிதனின் பொய்கள்
கடவுள்களைவாழ
வைக்கின்றன.
அறியாமைகளின் மீது
கட்டப்பட்டுக் கிடக்கிறது
சில நம்பிக்கைகள்.
கட்டப்பட்டதுஎன்பதற்காக
அவற்றைஇடிக்காமல் 
கடந்து போக முடியாது.
அருள்பாலிக்கும்
அம்மனுக்கும்அய்யனாருக்கும்
மனிதன் தான் கண் திறந்து
விட வேண்டியிருக்கிறது.       ---  ப. கவிதாகுமார் 

No comments: