Thursday 1 January 2015

புத்தாண்டே வருக! -கவிஞர் ந.நன்மாறன். . .

புத்தாண்டே உன்னைவருக, வருக என வரவேற்கின்றேன்!
மனதார வரவேற்க முடியாவிட்டாலும்
மரபுக்காக.தேசப்பிதாவின் தேகத்தைவீழ்த்தியவன்
 பிதாவிற்குரியநாட்டிலேயே போற்றப்படும்
 விந்தைவேறெங்கும் கண்டதுண்டா

பொதுமக்கள் பணம்போட்டுஉருவான
பொதுத்துறைஅயல்நாட்டு நிறுவனத்துக்கு
தனியாரின் சுயநலனுக்கு!பெயர் மாற்றம்
இல்லாத தனியார்துறை
இதுதான் மோடிவித்தை என்பதோ

நரபலி கண்டோம்
இது எந்த பலி
இல்ல மதம் திரும்புவோம்என்கிறார்கள்
ஆதிமனிதனுக்கு ஏது மதம்
எங்கிருந்தது இல்லம்

இல்லம் திரும்பச் சொல்லுவோர்
உள்ளம் திருந்த மாட்டார்களா
உடன்கட்டை ஏற்றம்
மீண்டும் வரபெண்களை

தயார் செய்யவிளக்கு பூஜை
அவர்களிடமே விளக்கு
ஆனாலும் உன்னைவரவேற்கிறேன்
புத்தாண்டே....நாளை மாறும்
 என்றநம்பிக்கையோடு!...

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

....நாளை மாறும்
என்றநம்பிக்கையோடு!...
புத்தாண்டை வரவேற்போம்