Saturday 3 January 2015

03.01.2015விழாக்கோலம் பூண்ட தல்லாகுளம் CSC/TRC...

அருமைத் தோழர்களே ! 03.01.2015 அன்று நடைபெற்ற நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின்  செயற்குழு கூட்டத்தில் தல்லாகுளம் CSC/TRCயே விழாக் கோலம் பூண்டது என்றால் அது மிகையாகாது . . . 
மாவட்டத் தலைவர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் தலைமையில் நடை பெற்ற மாவட்ட செயற்குழுவில் 19 பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டது மிக, மிக சிறப்பம்சமாகும். மாவட்ட செயற்குழுவில் வைக்கப் பட்டிருந்த ஆய்படு பொருட்கள் மீது   மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன் அறிமுக உரை ஆற்றிய பிறகு கிளைச் செயலர்கள் விவாதத்தில் கலந்து கொண்டனர்.அதன்பின் இம்மாதம் (ஜனவரி-2015)பணி நிறைவு பெறும் மாவட்ட உதவிச் செயலர், பண்பாளர் - அருமைத் தோழர் ஆர்.இரவிச்சந்திரன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா மிகவும், சீரும் சிறப்புமாக நடந்தது. தோழர் இரவிச்சந்திரன் அவர்களுக்கு சந்தன மாலை அணிவித்து, நினைவு பரிசாக கணையாளி அணிவித்து அனைவரும் பாராட்டும் வண்ணம் அறிய தொரு வாழ்த்துரையை, மதுரை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அருமைத் தோழர். ஆர். அண்ணாதுரை MLA அவர்கள் நிகழ்த்தினார்.தோழர் இரவிச்சந்திரன் அவர்களுக்கு, சால்வை அணிவித்து மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன், மாவட்ட உதவிச் செயலர் தோழர்.இராவிச்சந்திரன் தொழிற்சங்க பணிகளை மிக சீரிய முறையில் நினைவு கூர்ந்து தோழமைபூர்வமான வாழ்த்துரை வழங்கினார்.அதனை தொடர்ந்து தோழர்கள் GKV, எஸ். ஜான் போர்ஜியா, பி. சந்திர சேகர், V.V.R, எஸ்.இராமலிங்கம் , கே.பழனி குமார், என். செல்வம்  மற்றும் மாவட்ட சங்கநிர்வாகிகளும், கிளைச்செயலர்களும் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தனர்.தோழர்கள், சி.செல்வின் சத்தியராஜ், எஸ். ஜான்போஜியா, பி. சந்திர சேகர், எஸ்.எம்.புஷ்பராணி, என். ஈஸ்வரி, எஸ். சுமதி, ஆகியோர் வாழ்த்துரையும், CSC/TKM கிளைச் செயலர் தோழர்.எஸ். சாத்தாவு தோழர் ஆர்.இரவிச்சந்திரன் நட்பு, பண்பு குறித்த நல்லதொரு கவிதையை அரங்கில் வாசித்து அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். அதன்பின் அருமைத் தோழர் ஆர். இரவிச்சந்திரன் அற்புதமான ஏற்புரை நிகழ்த்தியதோடு, தனது பணி நிரைவிற்குப்பின் நமது BSNLEU தொழிற்சங்கத்திற்கு முழுமையான பணி செய்து உதவி செய்வதாக அனைவரின் பலத்த கரஒலிக்கிடையே உறுதியளித்தார்.  நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர். எஸ். மாயாண்டி பழைய தந்திப் பகுதி பணிகளை நினைவு கூர்ந்து நன்றி கூறி முடித்தார்.மதிய உணவு இடைவேளைக்குப்பின் மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தை தொடர்ந்து, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலர் தோழர்.என். சோனைமுத்து வாழ்த்துரைக்குப்பின், இலாகா பணி நிமித்தம் செல்லுகின்ற போது விபத்தாகி காயம் பட்ட ஒப்பந்த ஊழியர் தோழர்.முத்து முருகன் மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து கவனித்து வந்தTNTCWU +BSNLEU மதுரை மாவட்ட சங்கங்கள், ஒரு சிறிய (ரூ.10100) நிதியையும் வழங்கியது.மாவட்ட செயற்குழு எதிர்வரும் அத்துணை இயக்கங்களையும் மிக சக்தியாக நடத்திட திட்டம் தீட்டியதோடு,, மாவட்டச் செயலர் தொகுப்புரை வழங்க, மாவட்ட உதவிச் செயலர் தோழர். எ .நெடுஞ்செழியன்  நன்றி கூறி செயற்குழுவை முடித்து வைத்தார். 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா