Saturday 13 December 2014

சாரதா சீட்டு- ஊழல் மேற்குவங்கஅமைச்சர் மதன் மித்ரா கைது

மேற்குவங்கத்தை உலுக்கியுள்ள சாரதா சீட்டுக்கம்பெனி ஊழல் விவகாரத்தில் மம்தா பானர்ஜி அரசின் அமைச்சரவையில் மிக முக்கிய நபராக இருக்கும் மதன் மித்ரா,வெள்ளியன்று கைது செய்யப்பட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான மதன் மித்ரா, மேற்குவங்க போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார். இவர், சாரதா ஊழலில் பெருமளவிற்கு பலன் பெற்றுள்ளார்;கிரிமினல் சதி, ஏமாற்று உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப் பட்டதைத் தொடர்ந்து வெள்ளியன்று இவரை கைது செய்துள்ளோம் என மத்திய குற்றப்புலனாய்வுக் கழக (சிபிஐ) அதிகாரிகள் கொல்கத்தாவில் தெரிவித்தனர்.இந்த ஊழலில் திரிணாமுல் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமான நபருமான சிரிஞ்சய் போஸ் கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்குள் அக்கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

No comments: