Monday 1 December 2014

செய்தி . . . துளிகள் . . .

v  அக்டோபர் 2014க்கான விலைவாசிப்படி உயர்வில்  மாற்றமில்லை என்று கூறப்படுகின்றது.  ஜனவரி2015  விலைவாசிப் படி  உயராமலோ  அல்லது குறைந்தோ போகலாம். 
v  MTNL - BSNL  இணைப்பு பற்றி அரசு தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் அது பற்றி பரிசீலிக்க 4 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளதாகவும் மேலவை கேள்வி நேரத்தில் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.மேலும் விருப்ப ஓய்வு மற்றும் ஊழியர்களின் சம்பளச்சுமையில் ஒரு பகுதியை அரசே ஏற்றுக்கொள்ளுதல் போன்ற முந்தைய அரசின் பரிந்துரை யின் மீது இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
v  மாற்றல் பிரச்சினைகளில் இருந்து உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு விலக்கு அளித்து BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளதுஉடல் ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
v டிசம்பர் 5 அன்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து  மாநிலத்தலைநகரங்களில் மத்திய அரசின் ஊழியர் சட்டங்களை திருத்தும் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கின்றன 
v  இன்று 01/12/2014 முதல் தமிழகத்தில் ERP முறை அமுல்படுத்தப்படுகின்றது. BLACKOUT PERIOD என்னும் பணிகளற்ற காலம் 10/12/2014 வரை கடைப்பிடிக்கப்படும். 15/12/2014லில் இருந்து ERP திட்டம்  நடைமுறையில் செயல்படுத்தப்படும்.

No comments: