Thursday 6 November 2014

தமிழகத்தில் ERP அறிமுகம் தள்ளிவைப்பு !!

அருமைத் தோழர்களே! நமது தமிழகத்தில் ERP அமுலாக்கம் குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்குகாவது தள்ளி வைக்க வேண்டும் என அனைத்து சங்கங்கள் சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டதை நமது இணைய தளத்தில் முன்பு வெளியிட்டு இருந்தோம் என்பது தாங்கள் அனைவரும் அறிந்த ஒன்று.... 
  • தமிழகத்தில்  இன்னும் பல மாவட்டங்களில் 
  • ERP பணிகள் முழுமை பெறாத நிலையில்,
  • ERP அமுலாக்கம் 01/12/2014க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  • இதற்கான அறிவிப்பை 05/11/2014 அன்று மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது
* மாவட்ட மட்டத்தில் அனைத்து பணப்பட்டுவாடாக்களும் 26/11/2014க்குள் முடிக்கப்பட வேண்டும்.
* ERP மூலம் டிசம்பர் மாத சம்பளம் தயாரிக்கப்பட்ட பின்புதான் GPF உள்ளிட்ட ஊழியர்களின் மற்ற                     பட்டுவாடாக்கள் வழங்கப்படும்.
* டிசம்பர் மாதம் முழுக்க எந்த விதமான பணப்பட்டுவாடாக்களும் இருக்காது.
* GPF தொகைக்கு விண்ணப்பிப்பது
* GPFஐக் கூட்டுவது - குறைப்பது
* வருமான வரிக்காக சேமிப்பு மற்றும் வீட்டுக்கடன் கட்டிய விவரங்களை அளிப்பது
* வீட்டு வாடகை கொடுத்த தகவல்களை அளிப்பது
* HRMSல் தவறான தகவல் இருந்தால் உரிய திருத்தம் செய்வதுபோன்ற பிரச்சினைகளை                                         தோழர்கள் - நவம்பர் மாதத்திலே  செய்து முடிக்கவும்.
ERP அமுலாக்கத்தை அவசர கோலத்தில்,அள்ளி தெளிக்க முற்பட்ட மாநில நிர்வாகத்தைசற்றே நிதானிக்க வைத்த அனைத்து சங்க கூட்டமைப்பிற்கு நமது நன்றி.
தமிழகத்தில் ERP அறிமுகம் தள்ளிவைப்பு !!

 ERPயை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான அனைத்து முன் நடவடிக்கைகளும்  மேற்கொள்ளாமல்,  சங்கங்களுடன்    கலந்துபேசாமல் அவசரகதியில் இம்மாதம் ERP தமிழகத்தில்  அறிமுகப்படுத்தப்படும்  என்று  அறிவித்து  கணக்குகள்  close  செய்யப்பட்டு,HR package கூட முடக்கப்பட்டது.      இறுதியில் பல பணிகள் இன்னும் செய்யவேண்டி உள்ளதால் அடுத்த மாதம் டிசம்பர் -14 வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இம்மாதம் GPF பட்டுவாடா  இருக்கும்...

No comments: