Wednesday 26 November 2014

தபால்காரர் 806 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் . . .

தமிழ்நாடு தபால் வட்டத்தில் போஸ்ட்மேன், மெயில் கார்டு என 806 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பணியிடங்களுக்கு 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் 2014 டிச.7ம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுக்கு அனுமதிக்கப் படுவர்.மெட்ரிக் படிப்பில் (10ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்கள் போஸ்ட்மேன் பணிக்கும், மெட்ரிக் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் மெயில்கார்டு பணிக்கும் விண்ணப்பிக் கலாம்.விண்ணப்பதாரர்கள் திறனறிதல் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, பணியிடங்கள் வழங்கப்படும். அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களும் 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இதுதவிர, பொது மற்றும் .பி.சி. பிரிவினர் 400 ரூபாய் தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஊனமுற்றோர் மற்றும் பெண் விண்ணப் பதாரர்களுக்கு தேர்வுக் கட்டணங்களை மின்னணு கட்டண வசதியுள்ள தபால் நிலையங்களில் செலுத்தலாம்.தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக டிச.7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். டிச.10–ம் தேதிக்குள் விண்ணப்ப கட்டணங்களை செலுத்த வேண்டும்.

No comments: