Monday 15 September 2014

ஒப்பந்த ஊழியர்கள் அணைவரும் 16.09.14 வேலைநிறுத்தம் ...

அருமைத் தோழர்களே! நமது BSNLEU+TNTCWU இரு மாநில சங்கங்களும் 15.09.14 முதல் காலவரையற்ற உண்ணா விரதம் சென்னை CGM அலுவலகத்தில் மேற்கொண்டு இருப்பதால் 16.09.2014 அன்று தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து,அன்றே சென்னை CGM அலுவலகம் முன்பு அனைவரும் பங்கேற்கும் பெருந்திரள் உண்ணாவிரதம் அறிவித்துள்ளது. எனவே, நமது மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒப்பந்த ஊழியர்கள்  16.09.14 அன்று ஒருநாள் வேலைநிறுத்தம் என்பதை ஏற்கனவே, நமது BSNLEU+TNTCWU மதுரை மாவட்டஇரு சங்கங்கள்  மூலம் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தாகிவிட்டது. ஆகவே, நமது மாவட்டத்தில் உள்ள ஹவுஸ் கீப்பிங் & கேபிள் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்கள் அணைவரும் 16.09.14 செவ்வாய் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தாகவேண்டும் என்பதை BSNLEU+TNTCWU இரு மாவட்டசங்கங்களும் கேட்டுக்கொள்கிறது. இப் பிரச்சனையில் கிளச்சங்க செயலர்கள் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டுகிறோம். 15.09.14 இரவு மதுரையில் இருந்து புறப்பட்டு 16.09.14 சென்னை CGM அலுவலக   பெருந்திரள் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேன் ஏற்பாட்டை தோழர். என். சோணைமுத்து செய்துவருகிறார். தோழர்கள் தொடர்பு கொள்ளவும். BSNL தமிழ்மாநில நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்து உறுதியுடன் போராடுவோம்… 
---என்றும் தோழமையுடன் ...எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.

No comments: