Saturday 30 August 2014

சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரைமாவட்ட முதல் மாநாடு!

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மதுரைமாநகர் மாவட்ட முதல் மாநாடு ஆகஸ்ட் 31 ம் தேதி நடைபெறுகிறது.மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் மாலை 3 மணியளவில் நடைபெறும் மாநாட்டிற்கு மாவட்ட அமைப்பாளர் என்.நன்மாறன் தலைமை வகிக்கிறார். வரவேற்புக்குழு தலைவர் ஹாஜி .செய்யது முன்னிலை வகிக்கிறார். வழக்கறிஞர் என்.முத்து அமுதநாதன் வரவேற்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் அரசு டவுன் ஹாஜியார், மதுரை, முகவை சிஎஸ்ஐ திருமண்டலச் செயலர் டாக்டர் தாசையன், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் பேரா.பஷீர் அகமது, பாரதி தேசியப் பேரவைத்தலைவர் .ஜான்மோசஸ், எட்வர்டு மன்ற செயலாளர் முனைவர் .இஸ்மாயில், மதுரை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க செயலர் பேரா. .கே. தஷ்ஃரீப் ஜஹான் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில அமைப்பாளருமான எஸ்.நூர்முகமது மாநாட்டினை நிறைவு செய்துவைத்து உரையாற்றுகிறார். டி.சாலமன் நன்றி கூறுகிறார்.சிறுபான்மை மக்களைக் காப்பதற்கான தீர்மானங்களை முன்மொழிந்து என்.ஜெயச்சந்திரன், எஸ்.பாலா ( ஏஐஐஇஏ), இரா.மணிமேகலை, பா.அந்தோணிசாமி, ஜெ. எகியா ஆகியோர் பேசுகின்றனர். முன்னதாக இசைஅறிஞர் நா.மம்முது, ராஜா முகமது, அப்துல் ரஹீம், சி.இராயப்பன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

No comments: