Monday 4 August 2014

வண்ணமயமாக விடைபெற்றது காமன்வெல்த்...

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கட்நத ஜூலை 23ம் தேதி 20வது காமன்வெல்த் போட்டிகள் துவங்கியது. சுமார் 11 நாட்கள் நடந்த இப்போட்டிகளின் முடிவில், 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலம் என மொத்தமாக 174 பதக்கங்களை குவித்த இங்கிலாந்து பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. ஆஸ்திரேலியா (137 பதக்கம் (49 தங்கம், 42 வெள்ளி, 46 வெண்கலம்)) இரண்டாவது இடத்தையும், கனடா ( 82 பதக்கம் (32 தங்கம், 16 வெள்ளி, 34 வெண்கலம்) )மூன்றாவது இடத்தையும் பெற்றது. இதில் மொத்தமாக இந்தியா 64 பதக்கத்தை (15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம்) வென்ற போதும், மொத்த தங்கப்பதக்கங்களின் அடிப்படையில் நான்காவது இடத்தை போட்டியை நடத்திய ஸ்காட்லாந்திடம் ( மொத்தம் 53 பதக்கம் (19 தங்கம், 15 வெள்ளி, 19 வெண்கலம்)) பரிகொடுத்தது.இதுவரை ஸ்காட்லாந்தில் நடக்கதாக அளவிற்கு சிறப்பாக கடந்த 11 நாட்கள் நடந்த இப்போட்டிகளின் நிறைவு விழா, நேற்று ஹாம்டன் பார்க் மைதானத்தில் மிகவும் வண்ணமயமாக நடந்தது. சுமார் 40,000 ரசிகர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் 15,000 தன்ஆர்வலர்கள், 1,500 பணியாளர்கள், 30,000 ஒப்பந்ததாரர்கள், 1,800 காவலர்கள் என அனைவரும் மைதானத்தில் வரிசையாக நுழைந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பின் இப்போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. பின் வரும் 2018ல் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடத்தப்படுவதை தொரிவிக்கும் விதத்தில் காமன்வெல்த் போட்டியில் பயன்படுத்தப்பட்ட கொடி ஒப்படைக்கப்பட்டது

No comments: