Wednesday 27 August 2014

26.08.14-மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற தர்ணா...

அருமைத் தோழர்களே! BSNLEU + TNTCWU இரு மத்திய,மாநில சங்கங்களின் அறை கூவலுக்கு இணங்க நமது மதுரை மாவட்டத்தில் கடந்த 26.02.14 அன்று மாபெரும்ஆர்ப்பாட்டத்தை சக்தியாக நடத்தினோம்.அடுத்தபடியாக 2-ம்கட்ட
போராட்டமாக26.08.14அன்று,மதுரை தல்லாகுளத்தில், லெவல்-4 வளாகத்தில்,
கூட்டுத்தலமையாக மாவட்டத்தலைவர்கள் தோழர்கள், சி.செலவின் சத்தியராஜ், கே.வீரபத்திரன் பொறுப்பேற்று தர்ணாவை வழி  நடத்தினர். தர்ணாவில் சுமார் 45 பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 250 பேர் கலந்துகொண்டது மிக சிறப்பம்சமாகும். TNTCWU மாவட்டச் செயலர், என்.சோனைமுத்து, வந்திருந்த அனைவரையும் வரவேற்றும்,கோரிக்கைகளை விளக்கியும் பேசினார். BSNLEU மாவட்டச் செயலர், எஸ். சூரியன் தர்ணாவை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். 
கோரிக்கையை விளக்கி,மாநில,மாவட்டசங்க  நிர்வாகிகள் தோழர்கள் . . .
எ.அன்பழகன்,எஸ்.மானுவேல்பால்ராஜ்,எஸ்.கண்ணன்என்.செல்வம்,எஸ்.வள்ளி,டி.கே.சீனிவாசன்,வி.சுப்புராயலு,எஸ்.பரிமளரெங்கராஜ்,பி.கணேசன்ஆகியோர் உரை நிகழ்த்தினர். தர்ணாவை மாநில துணைத் தலைவர் தோழர்.எஸ். ஜான்போர்ஜியா முடித்துவைத்து உரை நிகழ்த்தினார். மாவட்டபொருளர் தோழர்.எஸ்.மாயாண்டி நன்றி கூற  தர்ணா இனிதே நிறைவுற்றது.
என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன்...D/S-BSNLEU.

No comments: