Friday 29 August 2014

2014-நவம்பர் 6 - 9 நமது BSNLEUஅகில இந்திய மாநாடு...

அருமைத் தோழர்களே! நமது BSNLEU சங்கத்தின் அகில இந்திய மாநாடு எதிர்வரும்  நவம்பர் மாதம் 6-ம் தேதி முதல் 9-ம் தேதிவரை  கொல்கத்தா  நகரில் நடைபெற உள்ள அனைத்திந்திய  மாநாட்டிற்கான சார்பாளர் மற்றும் பார்வையாளர் எண்ணிக்கை 2012 ஜனவரி மாதம் முதல் 2013 ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாம் செலுத்தியுள்ள பகுதிப்பணம்  அடிப்படையில்  மத்திய சங்கத்தால் முறையே அறிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி நமது மதுரை  மாவட்டத்திற்கு 9 சார்பாளர்களும்பார்வையாளர்களும் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.நமது சங்க அமைப்பு விதிப்படி நமது திண்டுக்கல் 7 வது மாவட்ட மாநாட்டில் நாம் ஏற்கனவே சார்பாளர்கள் / பார்வையாளர்கள் முறைப்படி தேர்ந்தெடுத்துள்ளோம். 2014-நவம்பர் 6 - 9 நமது BSNLEU அகில இந்திய மாநாட்டிற்கு செல்லவிருக்கும்  தோழர்களுக்கான பயண டிக்கட் எடுப்பதற்கான பணியை நமது மதுரை மாவட்ட சங்கம் செய்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அப்பணி செவ்வனே  முடிந்தேறும் என்பதை மிக மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
  • மொத்த டெலிகேட்               =  1156
  • மொத்த பார்வையாளர்கள்       =  725
  • தமிழ் மாநில டெலிகேட்         =   68
  • தமிழ் மாநில பார்வையாளர்கள் =   42
  • மதுரை SSA டெலிகேட்           =   9
  • மதுரை SSA பார்வையாளர்கள்   =   5 
---என்றும் தோழமையுடன்,  எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.

No comments: