Tuesday 22 July 2014

21.07.14 பணியில் இருந்தபோது ஒப்பந்த ஊழியருக்கு விபத்து...

தோழர்களே! வில்லாபுரம் துனைக்கோட்டத்தில் பனி புரிந்து வரும் தோழர். முத்துமுருகன் என்றஒப்பந்த ஊழியர் மதுரை வில்லாபுரம் தொலை பேசியகத் திலிருந்து21.07.14காலையில்கேபிள் பழுது சரி செய்வதற்கான பொருட்களை சைக்கிளில் எடுத்துக் கொண்டு பணிக்கு சென்றபோது எதிரே  (ஆடுகளை ஏற்றிக்கொண்டு) வேகமாகவந்த ஒரு வேன் பலமாக மோதி  விபத்தை ஏற்ப்படுத்தி கால், கை முறிவு ஏற்பட்டுள்ளது, தலையிலும் பலமாக அடிபட்டுள்ளது . அருகே இருந்தவர்கள் உடனடியாக 108 மூலமாக மதுரை ராஜாஜி மருத்துவமணையில் அவசர பகுதியில் அனுமதிக்கப்பட்டு உடன் இருந்த நமது BSNLEU மாவட்ட துணைத் தலைவர், தோழர்.எஸ். மேனுவேல் பால்ராஜ் செய்தியை நமக்கு தெரிவித்த உடன் நமது தோழர்கள், சி.செல்வின்  சத்தியராஜ், எஸ்.சூரியன், என். செல்வம், என்.சோணை முத்து, எ.குருசாமி, ஆரோக்கிய மகிமைதாஸ், கிருபானந்தன்,கோவிந்தன் உட்பட பலர் மருத்துவ மனைக்கு விரைந்து சென்று விபத்திற்குள்ளான தோழர்.முத்து முருகனின் முறையான மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்து, குடும்பத்தார்களையும் சந்தித்து ஆன ஆறு தலையும்,   வேண்டிய  நடவடிக் கைகளையும் எடுத்துள்ளோம். 
நிர்வாகத்தரப்பில் JTO, SDE, DE, AGM(Hr) ஆகிய அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும், ஒப்பந்தகாரர்  கவனத்திற்கும் முறையாக கொண்டுசென்று உள்ளோம். தொடர்ந்து தோழர்.என்.சோணைமுத்து அனைத்து உதவிகளையும் மாநில சங்க நிர்வாகிகளின் ஆலோசனைபெற்று செய்துவருகிறார்.
விபத்துக்குள்ளான தோழர் பூர்ண நலமாகி பணிக்கு திரும்ப நமது BSNLEU + TNTCWU இரு மாவட்ட சங்கங்களும் மனதார வாழ்த்துகிறது.
----என்றும்  தோழமையுடன் ....எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: