Thursday 17 July 2014

கும்பகோணம் பள்ளி தீ விபத்து10ம் ஆண்டு நினைவு தினம்...

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின், 10ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படடது. கடந்த, 2004, ýலை, 16ம் தேதி, கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். 18 குழந்தைகள் தீக்காயமடைந்தனர். இறந்த குழந்தைகளின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளை இழந்த பெற்றோர்களால், நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 16.07.14  தீயில் கருகி இறந்த குழந்தைகளின் பெற்றோர், அவரவர் வீட்டிலேயே, குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்களை படையலிட்டு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குழந்தைகளை இழந்த பெற்றோர், காயமடைந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். காலை, 11 மணிக்கு, கும்பகோணம், பாலக்கரையில் பள்ளி தீ விபத்தின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில், குழந்தைகளை இழந்த பெற்றோர் மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன், பெற்றோர் அஞ்சலி செலுத்தினர். நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கமும் தனது அஞ்சலியை பதிவு செய்கிறது.

No comments: