Friday 4 July 2014

எழுச்சியூட்டிய 04.07.14 BSNLEU + TNTCWU ஆர்ப்பாட்டம் . . .



அருமைத்தோழர்களே ! நமது மாவட்ட,மாநில சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க 04.07.14 அன்று மதியம் 1 மணிக்கு மதுரை  G.M அலுவலகத்தில் எழுச்சியுடன் கூடிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் BSNLEU + TNTCWU ஆகிய இரண்டு சங்கங்களின் சார்பாக நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுத் தலைமையாக தோழர்கள், சி . செல்வின் சத்தியராஜ், கே.வீரபத்திரன் இருவரும் இருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் 60 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்ப்பட்ட தோழர்கள்  கலந்து கொண்டனர் என்பது மிகவும் சிறப்பு அம்சமாகும். கோரிக்கைகளுடன் விண்ணதிரும் கோஷங்களை தோழர்.G.K.வெங்கடேசன் எழுப்பினார்.
மாவட்ட,மாநில சங்கங்களின் முடிவுப்படி தமிழ் மாநிலம் முழுமைக்கு, மாவட்ட தலைமையகங்களில் நடத்துகின்ற முதற்கட்ட போராட்டமான SSA அளவிலான போராட்டம் நமது மதுரை பொதுமேலாளர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்டசெயலர். தோழர்.எஸ்.சூரியன்,TNTCWU மாவட்ட செயலர்.தோழர்.என்.சோணைமுத்து, TNTCWUமாநில அமைப்பு செயலர், தோழர்.அன்பழகன்,ஆகியோர் உரையாற் றினர். BSNLEU மாநில துணைத்தலைவர்,தோழர்.எஸ். ஜான்போர்ஜியா நிறைவுரை நிகழ்த்தினார்.    
இறுதியாக BSNLEUமாவட்ட பொருளர்.தோழர்.எஸ்.மாயாண்டி நன்றிகூற ஆர்ப்பாட்டம் இனிதே நிறைவுற்றது.
.......என்றும் தோழமையுடன் ---எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: