Wednesday 2 April 2014

தோழர்.பா.விக்ரமனை ஆதரித்து மதுரையில் நூதனப் பிரச்சாரம்...

மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பா.விக்ரமனை ஆதரித்து தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தினர் நடத்திய நூதனப்பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் மதுரையில் போட்டியிடும் வேட்பாளர் பா.விக்ரமனை ஆதரித்து வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், குடியிருப்போர் நலச்சங்கங்கள், சமூக நல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.இந்த நிலையில், தமிழ்நாடு மருந்து மற்றும் விற் பனைப் பிரதிநிதிகள் சங்கத்தினர் செவ்வாயன்று மதுரை வீதிகளில் வேட்பாளர் பா.விக்ரமன் போன்ற முகமூடியை அணிந்து பொதுமக்களிடம் துண்டு அறிக்கையைக் கொடுத்து வாக்குசேகரித்தனர். தென் தமிழகத்தின் தொழில் நகரமாக மதுரையை மாற்ற வாக்களிக்க வேண்டிய சின்னம் சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் என்ற முழக்கத்துடன் அவர்கள் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்தப் பிரச்சாரத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கோபிநாதன், மாநிலச்செயலாளர் எஸ்.எஸ் .சீனிவாசன் , கிழக்கு கிளைச் செயலாளர் .ஜி.ஓம் பிரகாஷ், மேற்கு கிளைச் செயலாளர் ஜிவிவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments: